states

ஏற்கெனவே 6 வழக்குகளை ஒப்படைத்தும் ஒருவரையும் கைது செய்யாத சிபிஐ!

இம்பால், ஜூலை 29- மணிப்பூர் மாநிலத்தில், கடந்த மே 4 அன்று  பழங்குடி பெண்கள் இருவரை, ஆயிரக்க ணக்கான ‘மெய்டெய்’ இளைஞர்கள் சேர்ந்து,  நிர்வாணமாக இழுத்துச் சென்றதுடன், அவர்  களைக் கும்பல் வல்லுறவுக்கும் உள்ளாக்கிய கொடுமை நாட்டையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி யது.  இந்த கொடூரம் மிகவும் தாமதமாக கடந்த ஜூலை 19 அன்றுதான் வெளியுலகிற்குத் தெரிய வந்தது. தற்போது இந்தச் சம்பவம் ஒன்றிய - மாநில பாஜக ஆட்சியாளர்களுக்கு மிகப் பெரிய நெருக்கடியாக மாறியிருக்கிறது.  மணிப்பூர் நிலவரம் குறித்து பிரதமர் மோடி  பதிலளிக்கக் கோரி, எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் போராட்டங்களால் நாடாளுமன்றம் கடந்த 7 நாட்களாக முடங்கிக் கிடக்கிறது.  இதனால், எப்படியாவது இந்த பிரச்சனை களிலிருந்து தப்பித்துவிட வேண்டும் என்று  துடிக்கும் மோடி அரசு, பல்வேறு வேலைகளில் இறங்கியுள்ளது. முதலில் இப்படியொரு சம்ப வமே நடக்கவில்லை; வெளியான வீடியோ போலி- சித்தரிக்கப்பட்டது என்று கதையை மாற்ற வேண்டும். அல்லது, இந்த விவகா ரத்தை விசாரணை என்ற பெயரில் அமுக்கிவிட வேண்டும் என்று பலவாறாக யோசனையில் இறங்கியுள்ளது. அந்த அடிப்படையில்தான், மணிப்பூர் உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தவர்களைத் தேடிப் பழிவாங்கும் திட்டத் தைக் கையில் எடுத்தது. குக்கி பழங்குடி பெண்  கள் மீதான கும்பல் வல்லுறவுக் கொடுமை யை வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வீடியோ வை எடுத்தவரை, மோடி அரசு கைது செய்தது.  அவர் இந்த வீடியோவை எடுப்பதற்குப் பயன்  படுத்திய மொபைல் போனையும் பறிமுதல் செய்தது.

அடுத்ததாக பழங்குடி பெண்கள் 2 பேர் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட கொடுமை குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்த ரவிட்டுள்ளது. சிபிஐ-யும் அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் துவங்கியுள்ளது. மணிப்பூர் வன்முறையோடு தொடர்புடைய 6 வழக்குகள் ஏற்கெனவே சிபிஐயிடம் ஒப்ப டைக்கப்பட்டு இருக்கின்றன. சிபிஐ அமைப் பும், 6 வழக்குகளை பதிவு செய்தது. இந்த  வழக்குகள் தொடர்பாக விசாரணை மேற் கொள்ள டிஐஜி அந்தஸ்தில் உள்ள அதி காரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு  அமைக்கப்பட்டது. எனினும் இந்த 6 வழக்கு கள் தொடர்பாக இதுவரை ஒருவரையும் சிபிஐ  கைது செய்யவில்லை.

“6 வழக்குகள் தொடர்பாக கடுமையான சூழல்களில் சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை மேற்கொள்ளச் செல்  லும்போது கூட்டமாகத் திரண்டு பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவிப்பதால், சாட்சி களைக் கண்டறிவது கடினமாக உள்ளது. எனி னும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரு கிறது” என்று கைது நடவடிக்கை எடுக்க முடி யாத அவல நிலையில் தாங்கள் இருப்பதை சிபிஐ அதிகாரிகளே வெட்கமின்றி ஒப்புக் கொண்டுள்ளனர். இந்நிலையில், அவர்களிடமே காங்  போக்பி மாவட்டத்தில் பழங்குடி பெண்கள்  2 பேர் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட  வழக்கையும் மோடி அரசு தற்போது ஒப்ப டைத்துள்ளது. ஏற்கெனவே 6 வழக்குகளை விசாரிக்க முடியாமல் தவிக்கும் சிபிஐ-யிடம் தற்போது 7-ஆவது வழக்காக இந்த வழக்கு சேர்ந்துள்ளது. பழங்குடி பெண்கள் வல்லுறவுக்கு உள் ளாக்கப்பட்டது தொடர்பாக 18 வயதுக்கு உட்பட்ட சிறுவன் உள்பட இதுவரை 7 பேரை  மணிப்பூர் காவல்துறை கைது செய்து விட்டது.  அத்துடன், நிர்வாணமாக இழுத்துச் செல்லப்  பட்ட பழங்குடி பெண்களிடம் வாக்குமூலங் களை பதிவு செய்யும் நடவடிக்கையையும் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூர் வன்முறைக்கு எதிராக லண்டனில் அமைதிப் பேரணி!

பிரிட்டனை மையமாக வைத்து செயல்படும் இந்திய வம்சாவளி பெண்கள் குழு மணிப்பூர் வன்முறைக்கு எதிராக அமைதி வழிப் போராட்ட பேரணி யை மேற்கொண்டனர். அமைதி வழிப் பேர ணியை வெளிப்படுத்தும் விதமாக இந்தக் குழு முகக்கவசம் அணிந்து பேரணியில் கலந்து கொண்டனர். லண்டனில் உள்ள  இந்தியன் ஹை கமிஷன் முன்பு பதாகை களை ஏந்தி நின்ற இந்தக்குழு பின்னர் அங்கி ருந்து நாடாளுமன்ற வளாகத்துக்கு எதிராக  உள்ள மகாத்மா காந்தியின் சிலை நோக்கிச்  சென்று தங்களது இந்த அமைதி பேரணி யை முடித்துக் கொண்டனர்.  பேரணியில் கலந்துகொண்ட இந்திய வம்சாவளிப் பெண்கள், “மணிப்பூரில் இரண்டு குக்கி இன சகோதரிகளை நிர்வா ணமாக்கி ஊர்வலமாக இழுத்துச்சென்று கும்பல் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக் கப்பட்டதற்கு எதிராக இந்த அமைதி வழிப் பேரணியை நாங்கள் நடத்தியுள்ளோம். அந்த சகோதரிகளுடன் நாங்கள் உறுதியாக துணை நிற்கிறோம்” எனக் கூறினர்.